கோவை : உக்கடம் அருகே உள்ள புல்லுகாடு பகுதியில் அனுமதியின்றி போடப்பட்ட கேபிள் இணைப்புகளை வீட்டுவசதித் துறை அதிகாரிகள் துண்டித்ததால், கேபிள் ஆபரேட்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவை : உக்கடம் அருகே உள்ள புல்லுகாடு பகுதியில் அனுமதியின்றி போடப்பட்ட கேபிள் இணைப்புகளை வீட்டுவசதித் துறை அதிகாரிகள் துண்டித்ததால், கேபிள் ஆபரேட்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவையைச் சேர்ந்த முகைதீன் அப்துல் காதர் என்பவரின் மகன் சுல்தான். இவர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய கோவை கோட்டத்திற்குட்பட்ட உக்கடம் புல்லுகாடு குடிசை மாற்று குடியிருப்பில் கேபிள் டிவி இணைப்பு வழங்க முறையான அனுமதி பெற்றுள்ளார். இதற்காக, குடிசை மாற்று வாரியத்தில் ரூ. 4 லட்சத்திற்கு மேல் பணம் கட்டியுள்ளார். ஆனால், புல்லுகாடு குடியிருப்பு பகுதியில் பாபு, குஞ்சான் என்ற கேபிள் ஆபரேட்டர்கள் அனுமதியின்றி கேபிள் இணைப்பு கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, சுல்தான் கொடுத்த புகாரின் அடிப்படையில், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் முறைகேடாக அனுமதி இன்றி கேபிள் இணைப்பு போட்டுள்ள இணைப்பை துண்டிக்க காவல்துறையிடம் பாதுகாப்பு கோரி இருந்தனர். இந்த நிலையில், இன்று வீட்டுவசதித் துறை அதிகாரிகள் கேபிள் இணைப்பைத் துண்டித்தனர். இதனால், அனுமதியின்றி கேபிள் இணைப்பைப் போட்டவர்கள், கேபிளை துண்டித்ததால் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் புல்லுகாடு குடியிருப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவையைச் சேர்ந்த முகைதீன் அப்துல் காதர் என்பவரின் மகன் சுல்தான். இவர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய கோவை கோட்டத்திற்குட்பட்ட உக்கடம் புல்லுகாடு குடிசை மாற்று குடியிருப்பில் கேபிள் டிவி இணைப்பு வழங்க முறையான அனுமதி பெற்றுள்ளார். இதற்காக, குடிசை மாற்று வாரியத்தில் ரூ. 4 லட்சத்திற்கு மேல் பணம் கட்டியுள்ளார். ஆனால், புல்லுகாடு குடியிருப்பு பகுதியில் பாபு, குஞ்சான் என்ற கேபிள் ஆபரேட்டர்கள் அனுமதியின்றி கேபிள் இணைப்பு கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, சுல்தான் கொடுத்த புகாரின் அடிப்படையில், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் முறைகேடாக அனுமதி இன்றி கேபிள் இணைப்பு போட்டுள்ள இணைப்பை துண்டிக்க காவல்துறையிடம் பாதுகாப்பு கோரி இருந்தனர். இந்த நிலையில், இன்று வீட்டுவசதித் துறை அதிகாரிகள் கேபிள் இணைப்பைத் துண்டித்தனர். இதனால், அனுமதியின்றி கேபிள் இணைப்பைப் போட்டவர்கள், கேபிளை துண்டித்ததால் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் புல்லுகாடு குடியிருப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.