கோவை மாநகராட்சி இரவு தங்கும் மையத்தில் அடைக்கலம் புகுந்த மூதாட்டி 2 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்திடம் ஒப்படைப்பு

கோவை : கடந்த 2016-ம் ஆண்டு கோவை மாநகராட்சி இரவு தங்கு மையத்தில் ஆதரவற்றவராக சேர்க்கப்பட்ட தெலுங்கானாவைச் சேர்ந்த பார்வையற்ற மூதாட்டி, 2 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டார்.

கோவை : கடந்த 2016-ம் ஆண்டு கோவை மாநகராட்சி இரவு தங்கு மையத்தில் ஆதரவற்றவராக சேர்க்கப்பட்ட தெலுங்கானாவைச் சேர்ந்த பார்வையற்ற மூதாட்டி, 2 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டார். 

கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி மாநகர காவல்துறை ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், பார்வையிழந்த சங்கரம்மா (58) என்ற மூதாட்டியை சாலையிலிருந்து மீட்டு, ஆர்.எஸ். புரம் மாநகராட்சி இரவு தங்கும் மையத்தில் ஒப்படைப்பு செய்தனர். சுமார் இரண்டரை ஆண்டுகள் அங்கிருந்த அவர், தனது ஊர் தெலுங்கானா மாநிலம் காமரெட்டி என அடிக்கடி கூறி வந்தார். இதையடுத்து, தெலுங்கானா தலைமை காவல்துறைக்கு இது குறித்து விபரம் தெரிவித்தது. அதனடிப்படையில், தெலுங்கானா மாநிலம் தேவனபல்லி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சங்கரம்மாவின் குடும்பத்தினர் வசித்து வருவதை உறுதி செய்தனர். 



இந்த நிலையில், சங்கரம்மாவின் மகன் ரமேஷை தெலுங்கானா போலீசார், உரிய ஆவணங்களுடன் கோவைக்கு நேரில் அழைத்து வந்தனர். அப்போது, இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட மகனும், தாயும் மகிழ்ச்சியடைந்தனர். 

கோவை மாநகராட்சி ஆணையாளருக்கு வேண்டுதல் கடிதம் கொடுத்ததை ஏற்று, கடந்த இரண்டரை ஆண்டுகளாக மாநகராட்சி பராமரிப்பில் பாதுகாப்பாக தங்கியிருந்த பார்வையிழந்த சங்கரம்மாவை அவரது மகன் ரமேஷ் வசம் ஒப்படைத்து, தெலுங்கானா ஏ.எஸ்.சி. லட்சிராம் முன்னிலையில், சொந்த ஊருக்கு கூட்டிச் செல்ல அனுப்பி வைக்கப்பட்டனர்.

மாநகராட்சி இரவு தங்கும் மையத்தில் 2016-ம் ஆண்டு பராமரிக்க வேண்டி ஒப்படைப்பு செய்த மாநகர ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர், கோவை மாநகராட்சி ஆணையர், காப்பகத்தை பராமரித்து வரும் மலரும் விழிகள் தொண்டு நிறுவனம், காப்பாளர் கி. கங்காதரன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...