கோவை : மோசடி புகாரை திரும்பப் பெறக் கூறி பெண்ணிற்கு மிரட்டல் விடுத்த ஆடியோ விவகாரத்தில் எனக்கு தொடர்பில்லை என்று பார் நாகராஜ் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கோவை : மோசடி புகாரை திரும்பப் பெறக் கூறி பெண்ணிற்கு மிரட்டல் விடுத்த ஆடியோ விவகாரத்தில் எனக்கு தொடர்பில்லை என்று பார் நாகராஜ் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் ஆனைமலையைச் சேர்ந்த விஜய் என்பவர் கோகிலா மற்றும் அவரது கணவர் சம்பத் மீது மோசடி புகாரைக் கொடுத்துள்ளனர். இந்த நிலையில், இந்த மோசடி புகாரை திரும்பப் பெறக் கூறி விஜயின் மனைவி ஜூலியன்ராயர் என்பவரை செல்போனில் பொள்ளாச்சியைச் சேர்ந்த பார் நாகராஜ் மிரட்டல் விடுப்பது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஆடியோவிற்கும், எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என பார் நாகராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றையும் அவர் அளித்துள்ளார்.
புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பார் நாகராஜ் கூறியதாவது :- இந்த ஆடியோவில் பேசுவது நான் இல்லை. ஆடியோவில் குறிப்பிடப்படும் விஜய் மற்றும் ஜூலியன்ராயர் மீது தான் கோகிலா பொள்ளாச்சி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நக்கீரன் ஊடகத்தைச் சேர்ந்த செய்தியாளர் தன்னிடம் இது குறித்து பேசிய அடுத்த நாள், இந்த ஆடியோ வெளியாகி உள்ளது. எனவே, அவரையும், அந்தப் பெண்ணையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், என அவர் கூறினார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை மிரட்டிய வழக்கில் பார் நாகராஜ் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.