சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிட 55 பேர் வேட்புமனு தாக்கல் : இன்று ஒரேநாளில் மட்டும் 31 பேர் வேட்புமனு

கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில், இதுவரை 55 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.


கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில், இதுவரை 55 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ. கனகராஜ் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் காலமானார். இதையடுத்து, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட தொகுதிகளுடன் மே மாதம் 19-ம் தேதி, காலியாக உள்ள சூலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, சூலூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 22-ம் தேதி முதல் இன்று வரை பெறப்பட்டன. 6 நாட்கள் நடந்த வேட்புமனு தாக்கலில், அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 55 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தி.மு.க. சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த நிலையில், அ.தி.மு.க. சார்பில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் கனகராஜின் சகோதரர் வி.பி. கந்தசாமி இன்று அமைச்சர் வேலுமணியுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் சுகுமார் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

பின்னர் அவர் பேசுகையில், "சூலூரில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். 4 தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்," என நம்பிக்கை தெரிவித்தார். 

இதேபோல, மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஜி. மயில்சாமி வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க அரசை வலியுறுத்தும் வகையில் செயல்பட உள்ளேன். சூலூரில் விவசாய கல்லூரி அமைய நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார். 

மேலும், 10 ரூபாய் சில்லறை காசுகளை பானையில் எடுத்து வந்த சுயேட்சை வேட்பாளர் பழனிச்சாமி என்பவர், 2 ஆண்டுகளில் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பதவி விலகுவேன் என பத்திரத்துடன் வந்திருந்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று மட்டும், 31 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, மாற்று வேட்பாளர்கள் உள்ளிட்டோர் வாபஸ் பெற கடைசி நாள் மே 2-ம் தேதியாகும்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...