கோவை : ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் காவல்துறையினருக்கு பாலியல் நிகர்நிலை சட்டங்கள் குறித்து வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவை : ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் காவல்துறையினருக்கு பாலியல் நிகர்நிலை சட்டங்கள் குறித்து வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதிகா தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது :- பன்னிமடை பிரதீப் - வனிதா ஆகிய தம்பதியினரின் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த குடும்பத்தினருக்கு தமிழக அரசு வழங்கி உள்ள ரூ. 3 லட்சம் போதுமானதாக இல்லை. அதனை உயர்த்தி தர வேண்டும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிட வேண்டும்.

மேலும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக அதிகமாக பாலியல் வன்முறை சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தி, அதனை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்துடன் இணைக்கப்பட வேண்டும். பாலியல் சம்பவங்கள் தனிநபர் கழிப்பிடங்கள் இல்லாத பகுதிகளில், இயற்கை உபாதைக்கு செல்லும் இடங்களில்தான் நடைபெறுவதால், பிரதமரின் தனிநபர் கழிப்பிட திட்டத்தின் கீழ் அனைவருக்கும் கழிப்பறை அமைத்துத் தர வேண்டும், இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் மாதர் சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர் வாசுகி பேசியதாவது :- குற்ற சம்பங்களைக் குறைக்க பாலியல் நிகர்நிலை சட்டங்கள் குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இதற்கு மாதம் ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல்துறையினர், பொதுநல அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தப்படும் பட்சத்தில், குற்ற சம்பவங்களைக் குறைக்க முடியும்.
பொள்ளாச்சி விவகாரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர்தான் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என வேண்டுகோள் வைத்தது. தற்போது சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதை வரவேற்கிறோம். பொள்ளாச்சி விவகாரத்தில் தங்களிடம் உள்ள ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். பொள்ளாச்சி விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால், கோரிக்கைகள் முன் வைத்து மாவட்ட செயலாளர் ராதிகா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது, என தெரிவித்தார்.
இது தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதிகா தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது :- பன்னிமடை பிரதீப் - வனிதா ஆகிய தம்பதியினரின் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த குடும்பத்தினருக்கு தமிழக அரசு வழங்கி உள்ள ரூ. 3 லட்சம் போதுமானதாக இல்லை. அதனை உயர்த்தி தர வேண்டும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிட வேண்டும்.

மேலும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக அதிகமாக பாலியல் வன்முறை சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தி, அதனை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்துடன் இணைக்கப்பட வேண்டும். பாலியல் சம்பவங்கள் தனிநபர் கழிப்பிடங்கள் இல்லாத பகுதிகளில், இயற்கை உபாதைக்கு செல்லும் இடங்களில்தான் நடைபெறுவதால், பிரதமரின் தனிநபர் கழிப்பிட திட்டத்தின் கீழ் அனைவருக்கும் கழிப்பறை அமைத்துத் தர வேண்டும், இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் மாதர் சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர் வாசுகி பேசியதாவது :- குற்ற சம்பங்களைக் குறைக்க பாலியல் நிகர்நிலை சட்டங்கள் குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இதற்கு மாதம் ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல்துறையினர், பொதுநல அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தப்படும் பட்சத்தில், குற்ற சம்பவங்களைக் குறைக்க முடியும்.
பொள்ளாச்சி விவகாரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர்தான் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என வேண்டுகோள் வைத்தது. தற்போது சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதை வரவேற்கிறோம். பொள்ளாச்சி விவகாரத்தில் தங்களிடம் உள்ள ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். பொள்ளாச்சி விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால், கோரிக்கைகள் முன் வைத்து மாவட்ட செயலாளர் ராதிகா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது, என தெரிவித்தார்.