திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் உயர்ந்து இருப்பதே, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்திருப்பதற்கு காரணம் என மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் உயர்ந்து இருப்பதே, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்திருப்பதற்கு காரணம் என மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 98.53 சதவிகிதம் தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் திருப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது :- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 98.53 சதவிகிதம் தேர்ச்சியோடு முதலிடம் பிடித்துள்ளோம். மொத்தம் தேர்வு எழுதிய மாணவர்கள் 29,153. அதில் தேர்ச்சியடைந்தவர்கள் 28,723 பேர். 12-ம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம்போல், 10-ம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதத்திலும் முதலிடம் பெற்றிருக்கிறோம். இதற்கு காரணமான ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஒரே ஆண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆதிதிராவிடர் பள்ளியில் 100 சதவிகித தேர்ச்சி, அரசு பள்ளியில் 97.54 தேர்ச்சி என இதெல்லாம்தான் முதலிடத்திற்கான காரணமாக பார்க்கப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறை சிறப்பான முறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி, அவர்களை சிறப்பான முறையில் தேர்ச்சியடைய செய்துள்ளது, எனக் கூறினார்.
இதனையடுத்து, அரசுப் பள்ளி மாணவர்கள் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இன்றைய தினம் வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 98.53 சதவிகிதம் தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் திருப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது :- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 98.53 சதவிகிதம் தேர்ச்சியோடு முதலிடம் பிடித்துள்ளோம். மொத்தம் தேர்வு எழுதிய மாணவர்கள் 29,153. அதில் தேர்ச்சியடைந்தவர்கள் 28,723 பேர். 12-ம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம்போல், 10-ம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதத்திலும் முதலிடம் பெற்றிருக்கிறோம். இதற்கு காரணமான ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஒரே ஆண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆதிதிராவிடர் பள்ளியில் 100 சதவிகித தேர்ச்சி, அரசு பள்ளியில் 97.54 தேர்ச்சி என இதெல்லாம்தான் முதலிடத்திற்கான காரணமாக பார்க்கப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறை சிறப்பான முறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி, அவர்களை சிறப்பான முறையில் தேர்ச்சியடைய செய்துள்ளது, எனக் கூறினார்.
இதனையடுத்து, அரசுப் பள்ளி மாணவர்கள் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.