கோவை : கோவையில் பல்வேறு இடங்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெண் உள்பட 10 பேர் மாநகராட்சி ஆதரவற்றோர் தங்கும் மையத்தில் சேர்க்கப்பட்டனர்.
கோவை : கோவையில் பல்வேறு இடங்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெண் உள்பட 10 பேர் மாநகராட்சி ஆதரவற்றோர் தங்கும் மையத்தில் சேர்க்கப்பட்டனர்.
நேற்று மதியம் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஏ.எச்.டி.யூ. ம், எஸ்.ஐ. தலைமையில் குழுவினர்கள், காந்தி புரம், x- கட் ரோடு, ஜே.எம் சிக்னல், வ.உ.சி. பார்க் ஆகிய இடங்களில் பிச்சை எடுத்த 10 பேரை ( 9 ஆண்கள், 1 பெண்) மீட்டு காப்பகத்தில் பராமரிக்க வேண்டி ஒப்படைப்பு செய்தனர். இவர்களுக்கு உணவு, உறைவிடம், உடைகள் வழங்கப்பட்டு உடன் கவுன்சிலிங் வழங்கி, தற்போது மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். உறவினர்களிடம் ஒப்படைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை பி1 காவல் நிலையத்திலிருந்து எஸ்.எஸ்.ஐ. ராஜ்பாரதி, சண்முகம் (60) என்ற முதியவரை பராமரிக்க ஒப்படைப்பு செய்தார். முதியவரிடம் பேசியதில் அவருக்கு யாருமில்லை என்றும், ஆதலால் தான் காப்பகத்தில் இருந்து கொள்வதாகவும் கூறினார்.