திருப்பூரில் பாறைக்குழியில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

திருப்பூர் : திருப்பூரில் பாறைக்குழியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : திருப்பூரில் பாறைக்குழியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சுஜித் (14), சேது (14), கோகுல் (16) ஆகிய மூன்று பேரும் தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இதனிடையே, மூவரும் திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள பாறைக்கிழியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது, மாணவர்கள் மூன்று பேரும் குளித்து கொண்டிருந்த போது, கோகுல் என்ற மாணவன் ஆழமுள்ள இடத்தில் சிக்கிக்கொண்டு, நீரில் மூழ்குவதை சக மாணவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது, கோகுலை சேது என்ற மாணவன் காப்பாற்ற முயன்ற போது,இருவரும் நீரில் மூழ்கினர். நண்பர்கள் இருவரும் நீரில் மூழ்குவதை கண்ட உடனிருந்த சுஜித், இது குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார். 



பின்னர், பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி நீரில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவர்களை மீட்டனர். தொடர்ந்து, சடலங்களை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



உயிரிழந்த பள்ளி மாணவன் கோகுல் 12ஆம் வகுப்பிற்க்கும், சேது என்ற மாணவன் 10 ஆம் வகுப்பிற்கும் ஒரு மாதத்தில் பள்ளியில் சேர உள்ள நிலையில், மாணவர்கள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...