கோவை : முல்லை குரூப்ஸ் நிறுவனத்தின் மீது 15 லட்சம் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் புகார் தெரிவிக்கலாம் என போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : முல்லை குரூப்ஸ் நிறுவனத்தின் மீது 15 லட்சம் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் புகார் தெரிவிக்கலாம் என போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை காவல் துணை கண்காணிப்பாளர் (பொருளாதாரம் குற்றப்பிரிவு) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- முல்லை குரூப்ஸ், முல்லை பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் முல்லை ஜுவல்லரி ஆகிய நிறுவனங்கள் கோவை, ஈரோடு, மேட்டூர் மற்றும் கோபி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மீது கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தேவகுமார் என்பவர் கடந்த 24-ம் தேதி மோசடி புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், அதிக வட்டி கொடுப்பதாகக் கூறி பொதுமக்களிடம் ரூ. 15 லட்சம் மோசடி செய்யப்பட்டது. உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக, தலைமறைவாக உள்ள குறிஞ்சிநாதன், கதிர்வேல், அண்ணாதுரை, சத்திய மூர்த்தி மற்றும் அருணாரெமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே இந்த நிறுவனத்திடம் பணம் செலுத்தி ஏமாற்றப்பட்டவர்கள் வரும் 29-ம் தேதி முதல், கோவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் பணம் செலுத்தியதற்கான அசல் ஆவணங்களை சமர்பித்து நேரிடையாக புகார் தெரிவிக்கலாம், இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை காவல் துணை கண்காணிப்பாளர் (பொருளாதாரம் குற்றப்பிரிவு) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- முல்லை குரூப்ஸ், முல்லை பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் முல்லை ஜுவல்லரி ஆகிய நிறுவனங்கள் கோவை, ஈரோடு, மேட்டூர் மற்றும் கோபி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மீது கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தேவகுமார் என்பவர் கடந்த 24-ம் தேதி மோசடி புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், அதிக வட்டி கொடுப்பதாகக் கூறி பொதுமக்களிடம் ரூ. 15 லட்சம் மோசடி செய்யப்பட்டது. உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக, தலைமறைவாக உள்ள குறிஞ்சிநாதன், கதிர்வேல், அண்ணாதுரை, சத்திய மூர்த்தி மற்றும் அருணாரெமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே இந்த நிறுவனத்திடம் பணம் செலுத்தி ஏமாற்றப்பட்டவர்கள் வரும் 29-ம் தேதி முதல், கோவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் பணம் செலுத்தியதற்கான அசல் ஆவணங்களை சமர்பித்து நேரிடையாக புகார் தெரிவிக்கலாம், இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.