கோவை : கோவை மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி ரயில்நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பொய்யான தகவலை அளித்த மர்மநபர் குறித்து போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை : கோவை மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி ரயில்நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பொய்யான தகவலை அளித்த மர்மநபர் குறித்து போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் வெடிகுண்டு வெடித்து நூற்றுக்கணக்கான மக்கள் பலியானதையடுத்து, இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ரயில்நிலையங்கள் மற்றும் மக்கள் நடமாடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை அலுவலகத்திற்கு பொள்ளாச்சி மற்றும் கோவை பகுதிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லியுள்ளார். மேலும், பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் சற்று நேரத்தில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார். இதையடுத்து, சென்னை போலீசார் உடனடியாக கோவை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், அலைபேசியில் பேசிய நபர் பொள்ளாச்சி பகுதியில் 2 பேர் குண்டு வைக்கப் போவதாக பேசிக் கொண்டு இருந்தனர் என்றும், இதனை கேட்டுத்தான் உங்களுக்கு தகவல் கூறுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இதன்மூலம், அவர் பொள்ளாச்சியில் இருந்து பேசியதை போலீசார் உறுதி செய்தனர்.
இதையடுத்து, தகவல் அறிந்து உடனடியாக சென்ற போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை நடத்தினர். ஆனால், அந்தத் தகவல் வதந்தி என சோதனையில் தெரியவந்தது.
பின்னர், வெடிகுண்டு புரளி ஏற்படுத்திய மர்ம நபர் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். அதேபோல, சைபர் கிரைம் போலீசார் மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரனை செய்து வருகின்றனர்.
இலங்கையில் வெடிகுண்டு வெடித்து நூற்றுக்கணக்கான மக்கள் பலியானதையடுத்து, இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ரயில்நிலையங்கள் மற்றும் மக்கள் நடமாடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை அலுவலகத்திற்கு பொள்ளாச்சி மற்றும் கோவை பகுதிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லியுள்ளார். மேலும், பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் சற்று நேரத்தில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார். இதையடுத்து, சென்னை போலீசார் உடனடியாக கோவை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், அலைபேசியில் பேசிய நபர் பொள்ளாச்சி பகுதியில் 2 பேர் குண்டு வைக்கப் போவதாக பேசிக் கொண்டு இருந்தனர் என்றும், இதனை கேட்டுத்தான் உங்களுக்கு தகவல் கூறுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இதன்மூலம், அவர் பொள்ளாச்சியில் இருந்து பேசியதை போலீசார் உறுதி செய்தனர்.
இதையடுத்து, தகவல் அறிந்து உடனடியாக சென்ற போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை நடத்தினர். ஆனால், அந்தத் தகவல் வதந்தி என சோதனையில் தெரியவந்தது.
பின்னர், வெடிகுண்டு புரளி ஏற்படுத்திய மர்ம நபர் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். அதேபோல, சைபர் கிரைம் போலீசார் மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரனை செய்து வருகின்றனர்.