சூலூர் இடைத்தேர்தலில் பொங்கலூர் பழனிசாமி டெபாசிட் இழப்பார் - அதிமுக வேட்பாளர் கந்தசாமி

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக்கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக்கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. 

அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், மா.பா.பாண்டியராஜன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேமுதிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனப்பட்டி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அதிமுக வேட்பாளர் கந்தசாமி, "பொங்கலூர் பழனிசாமியும், நானும் பக்கத்து தோட்டக்காரர்கள். அவர் தொழிலதிபர். கல்லூரி உரிமையாளர். பொங்கலூர் பழனிசாமி மாளிகையில் இருந்து மக்களை பார்ப்பவர். ஆனால் நான் மக்களோடு மக்களாக இருந்து மாளிகையை பார்ப்பவன். பொங்கலூர் பழனிசாமியை சாதாரணவர்கள் பார்க்க முடியாது. என்னை எளிமையாக அணுகலாம். கூட்டணி கட்சிகளின் சின்னங்கள் வேறுபட்டாலும், எண்ணங்கள் ஒன்றாக உள்ளது. என்னை எதிர்த்து போட்டியிட்ட திமுகவினர் அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். 

இடைத்தேர்லலில் பொங்கலூர் பழனிசாமி டெபாசிட் இழப்பது உறுதி. தேர்தலுக்கு பிறகு பொங்கலூர் பழனிசாமி, பெங்களூரு பழனிசாமி ஆக வேண்டும். அங்கும் அவருக்கு தொழில் உள்ளது. கருவறை முதல் கல்லறை வரை திட்டங்களை தந்த அரசு அதிமுக அரசு. இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...