தேக்கம்பட்டி கிராமத்தில் சாலை பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் புகார் : உதவி கோட்டப் பொறியாளர் நேரில் சென்று ஆய்வு

கோவை : காரமடை ஊராட்சிக்குட்பட்ட தேக்கம்பட்டி கிராமத்தில் சாலை பிரச்சனை குறித்து பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து, உதவி கோட்டப் பொறியாளர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கோவை : காரமடை ஊராட்சிக்குட்பட்ட தேக்கம்பட்டி கிராமத்தில் சாலை பிரச்சனை குறித்து பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து, உதவி கோட்டப் பொறியாளர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியம் தேக்கம்பட்டி ஊராட்சி தேக்கம்பட்டி கிராமத்தில் உள்ள சாலை பிரச்சனைகளை சீர் செய்ய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு மனு எழுதப்பட்டு பதிவு அஞ்சலில் அனுப்பப்பட்டது. இதையடுத்து, கடந்த 23ம் தேதி காலை கோட்டப் பொறியாளர் மற்றும் மேட்டுப்பாளையம் உதவி கோட்டப் பொறியாளர் ஆகியோரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கும் இந்த விவரங்கள் அனுப்பப்பட்டன. உதவி கோட்டப் பொறியாளர் அருணகிரியை தொடர்பு கொண்டு தெரியப்படுத்திய அடுத்த 3 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்தார். அதே நேரம், ஊர் பொதுமக்கள் சார்பாக 5 பேர் சம்பவ இடத்திற்கு சென்று பிரச்சனையை விளக்கினர். அனைத்தையும் பதிவு செய்து கொண்ட அவர், விரைவில் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு காண்பதாகவும் உறுதியளித்தார்.

குறிப்பாக, தற்காலிகமாக இரும்பு தடுப்பு அமைத்து தருவதாகவும் ,விரைவில் ரீட்டைனிங் வால் எனப்படும் எனப்படும் தாங்குச்சுவர் அமைத்து தருவதாகவும் கூறியுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட இடங்களில் வேகத்தடை அமைத்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார். இதைதொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக சரி செய்து தர கேட்டுக்கொண்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...