கோவை : இடைத்தேர்தலுக்கு பிறகு உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவை : இடைத்தேர்தலுக்கு பிறகு உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுகக்கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், மா.பா.பாண்டியராஜன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன், தே.மு.தி.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனப்பட்டி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது :- சூலூர் பகுதி எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அ.தி.மு.க.வின் கோட்டையாகும். 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை எடப்பாடி பழனிசாமி அரசு செய்துள்ளது. வளர்ச்சி பணிகள் செய்து விட்டு மக்களிடம் வாக்கு சேகரிக்கிறோம். தி.மு.க. எதுவும் செய்யவில்லை. தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி தொகுதி மாறிமாறி போட்டியிடுகிறார். அ.தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணி. கொள்கையுள்ள கூட்டணி. அ.தி.மு.க., பா.ஜ.க. தலைவர்களை விமர்சனம் செய்து மட்டுமே தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார். ஆனால், இதை செய்தோம் என சொல்ல தி.மு.க.விடம் எதுவும் இல்லை. தி.மு.க. ஆட்சி தமிழகத்திற்கு துரோகம் மட்டுமே செய்தது. அற்புதமான ஆட்சியை இ.பி.எஸ்., ஒ.பி.எஸ். தருகின்றனர்.

அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி எளிமையான வேட்பாளர், அனைவரும் விரும்பும் வேட்பாளர் அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்பதற்காக பொங்கலூர் பழனிசாமி போட்டியிடுகிறார். இடைத்தேர்தலுக்கு பிறகு உடனடியாக உள்ளாட்சி தேர்தல் வரும். சூலூரில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி, ஒரு இலட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் தான் நமக்கு பெருமை. கந்தசாமி மட்டுமே வேட்பாளர் அல்ல, அ.தி.மு.க.வினர் ஒவ்வொருவரும் வேட்பாளராக கருதி தேர்தல் பணியாற்ற வேண்டும். 39 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 22 இடைத்தேர்தல் தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும், என தெரிவித்தார்.