தொடர் புகார் எதிரொலி : காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் அதிரடியாக பணியிடை நீக்கம்

கோவை : பஞ்சாயத்து நிதிகளில் முறைகேடு உள்பட அடுத்தடுத்து பல்வேறு புகார்கள் எழுந்ததால், காரமடை வட்டார வளர்ச்சி அலுவலரை கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி அதிரடியாக பணியிடை நீக்கம் செய்தார்.

கோவை : பஞ்சாயத்து நிதிகளில் முறைகேடு உள்பட அடுத்தடுத்து பல்வேறு புகார்கள் எழுந்ததால், காரமடை வட்டார வளர்ச்சி அலுவலரை கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி அதிரடியாக பணியிடை நீக்கம் செய்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரமடை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருபவர் ரவிச்சந்திரன். இவர், கடந்த இரண்டு வருடங்களாக இங்கு பணியாற்றி வரும் நிலையில், இவர் மீது கடந்த சில மாதங்களாக பஞ்சாயத்து நிதிகளில் முறைகேடு செய்வது மற்றும் ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளுக்கு அங்கீகாரம் வழங்கியது என அடுத்தடுத்த புகார்கள் எழுந்தன. அத்துடன் அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் ஊழியர்களிடம் கண்ணியக்குறைவாக நடந்துகொள்வதாகவும் கூறி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார்கள் குவிந்தன. 

இதனையடுத்து, கோவை ஆட்சியர் ராசாமணி கடந்த இரு தினங்களாக இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரனை நடத்தி வந்தார். அதில், புகார் மீது விசாரிக்க முகாந்திரம் இருப்பதால் இன்று காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியில் இருந்து ரவிச்சந்திரனை விடுவித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர் மீது துறை ரீதியான விசாரனை நடத்த உள்ளதாகவும், குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரனை நடத்தி குற்றம் நிருபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...