நீலகிரி : உதகையில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், மலை தோட்ட காய்கறிகளை வாங்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி : உதகையில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், மலை தோட்ட காய்கறிகளை வாங்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகையில் உள்ள சுற்றுலா தலங்களான அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா சிகரம், ரோஜா பூங்கா, படகு இல்லம், மரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், தற்போது மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், சீசனை நம்பி பல்வேறு தரப்பு மக்கள் சுற்றுலா தொழிலை செய்து வரும் நிலையில், மலை தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், கோஸ், சைனீஸ் காய்கறிகள் என பல்வேறு காய்கறிகளை சாலையோரங்களில் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனை சுத்தப்படுத்தி வைத்து வியாபாரம் செய்து வருவதால், உதகை நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இவை பெரும்பாலும் இயற்கை உரங்களால் விளைவிக்கப்படுபவை என்பதால், இவற்றை வாங்குவதில் சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், இத்தொழிலை செய்து வரும் வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்திற்கு இந்த வருமானம் போதுமானதாக உள்ளதாக கூறுகின்றனர்.

சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகையில் உள்ள சுற்றுலா தலங்களான அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா சிகரம், ரோஜா பூங்கா, படகு இல்லம், மரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், தற்போது மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், சீசனை நம்பி பல்வேறு தரப்பு மக்கள் சுற்றுலா தொழிலை செய்து வரும் நிலையில், மலை தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், கோஸ், சைனீஸ் காய்கறிகள் என பல்வேறு காய்கறிகளை சாலையோரங்களில் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனை சுத்தப்படுத்தி வைத்து வியாபாரம் செய்து வருவதால், உதகை நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இவை பெரும்பாலும் இயற்கை உரங்களால் விளைவிக்கப்படுபவை என்பதால், இவற்றை வாங்குவதில் சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், இத்தொழிலை செய்து வரும் வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்திற்கு இந்த வருமானம் போதுமானதாக உள்ளதாக கூறுகின்றனர்.