கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பான ஆவணங்களை விரைவில் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் என கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பான ஆவணங்களை விரைவில் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் என கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் கூறியதாவது :- பொள்ளாச்சி பாலியல் வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான ஆணை வெளியிட்டிருந்த நிலையில் சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. ஆனால், இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டாலும், அதற்கான ஆணை சி.பி.சி.ஐ.டி.க்கு கிடைக்கவில்லை. ஆணை எங்களுக்கு கிடைத்ததும் சி.பி.ஐ.யிடம் வழக்கு குறித்த ஆவணங்களை ஒப்படைப்போம். அதன் பிறகே நாங்கள் விசாரணையை கைவிட முடியும். என தெரிவித்துள்ளனர்.
இன்றோ அல்லது நாளையோ சி.பி.ஐ. அதிகாரிகள் கோவைக்கு வருவதாக உள்ளதாக தகவல்களும் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் கூறியதாவது :- பொள்ளாச்சி பாலியல் வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான ஆணை வெளியிட்டிருந்த நிலையில் சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. ஆனால், இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டாலும், அதற்கான ஆணை சி.பி.சி.ஐ.டி.க்கு கிடைக்கவில்லை. ஆணை எங்களுக்கு கிடைத்ததும் சி.பி.ஐ.யிடம் வழக்கு குறித்த ஆவணங்களை ஒப்படைப்போம். அதன் பிறகே நாங்கள் விசாரணையை கைவிட முடியும். என தெரிவித்துள்ளனர்.
இன்றோ அல்லது நாளையோ சி.பி.ஐ. அதிகாரிகள் கோவைக்கு வருவதாக உள்ளதாக தகவல்களும் வெளியாகியுள்ளது.