ராமநாதபுரத்தில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 800 சவரன் நகை, ஒரு லட்சம் ரொக்கம் கொள்ளை : 2 பெண்களிடம் விசாரனை

கோவை : ராமநாதபுரம் பகுதியில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 800 சவரன் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசார், பணியில் இருந்த இரண்டு பெண்களிடம் தீவிர விசாரனை செய்து வருகின்றனர்.


கோவை : ராமநாதபுரம் பகுதியில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 800 சவரன் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசார், பணியில் இருந்த இரண்டு பெண்களிடம் தீவிர விசாரனை செய்து வருகின்றனர்.



கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள நஞ்சுண்டாபுரம் சாலையில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நேற்று மாலை சுமார் 3.30 மணி அளவில் முகமூடி அணிந்து மர்ம நபர் வந்துள்ளார். மேலும், இவர் பணியில் இருந்த ரேணுகா, திவ்யா ஆகியோரை தாக்கி விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

இந்த நிலையில், பணியில் இருந்த பெண் ஊழியர்கள் கொடுக்கும் தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக இருப்பதால், போலீசார் இரு பெண் ஊழியர்களிடம் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல, நிறுவனத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...