கோவை : அண்மையில் இலங்கையில் நடந்த வெடிகுண்டு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு கோவையில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோவை : அண்மையில் இலங்கையில் நடந்த வெடிகுண்டு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு கோவையில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தேவாலயங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதில், 100-க்கணக்கான கிறிஸ்துவர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த நிலையில், குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களின் ஆன்மா இளைப்பாறவும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆண்டவர் ஆறுதல் அளிக்க வேண்டியும், கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கேல் ஆதிதூதர் ஆலயத்தில் கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் தலைமையில் 200க்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பின்னர், ஜபங்கள் வாசித்தப்படி ஊர்வலமாக சென்றனர். இதன் இன்னர் தேவாலயத்தில் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது.