கோவையில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் : 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம், கோவில் பூசாரி கைது

கோவை : கோவையில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கோவில் பூசாரி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கோவை : கோவையில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கோவில் பூசாரி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.



கோவையை அடுத்த கோவில்பாளையம் அருகே உள்ளது கொண்டையம் பாளையம் கிராமம். இங்கு உள்ள மாரியம்மன் கோவில் பூசாரி தண்டபாணி (65) என்பவர் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் மாலையில் கோவிலின் அருகே விளையாடிக் கொண்டு இருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமியை கோவிலின் உள்ளே அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 



இதையடுத்து, உடலில் ஏற்பட்ட வலியால் துடித்த குழந்தையை பார்த்த பெற்றோர், சிறுமியை மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. 

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக நேற்று சிறுமியின் தாய் கோவில்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரைப் பெற்று கொண்ட காவல் ஆய்வாளர், சம்பவம் பற்றி விசாரித்து குற்றத்தை உறுதி செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையில் விசாரித்து, கோவில் பூசாரி தண்டபாணியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...