நீர்நிலைகளை தூர்வாருவதற்கான இயந்திரங்களை வாங்க அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாருவதற்காக ஜே.சி.பி. இயந்திரங்களை வாங்க வேண்டும் என அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை : குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாருவதற்காக ஜே.சி.பி. இயந்திரங்களை வாங்க வேண்டும் என அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி சமூக ஆர்வலர் கே.கே. ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மாநிலத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டதால், தங்கு தடையின்றி தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், மாநில அரசும் நீர்நிலைகளைப் பாதுகாக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுதாரர் தெரிவித்திருந்தார். 

இதனை விசாரித்த நீதிபதி, குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாருவதற்கான இயந்திரங்களை வாங்க வேண்டும் என அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டார். மேலும், சிவகங்கை மாவட்ட நிர்வாகம் ஜே.சி.பி. இயந்திரத்தை வாங்கி நீர்நிலைகளை தூர்வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் பயன்படுத்தி வருகிறது. இதனை அனைத்து மாவட்ட நிர்வாகமும் கடைபிடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...