உலகிலேயே அதிகபட்ச வெப்பநிலை நிலவிய பட்டியலில் வடஇந்தியாவிற்கு முதலிடம்

உலகிலே அதிகபட்ச வெப்பநிலை நிலவிய நகரமாக வடஇந்தியாவைச் சேர்ந்த மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கார்கோன் நகரம் உள்ளது.

உலகிலே அதிகபட்ச வெப்பநிலை நிலவிய நகரமாக வடஇந்தியாவைச் சேர்ந்த மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கார்கோன் நகரம் உள்ளது. 

ஆண்டுதோறும் கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கும். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே வெயில் தனது பணியை தொடங்கி விட்டது. குறிப்பாக, வடமாநிலங்களில் பொதுமக்கள் வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு வெப்பம் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் கார்கோன் நகரில் நேற்று பதிவான வெப்பநிலையின் அளவு, உலகளவில் அதிகபட்ச வெப்பநிலையாக இருந்துள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக இ.எல். டோரடோ காலநிலை குறித்த இணையதள பக்கத்தில், கார்கோனில் நேற்று 46.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருப்பதாகவும், இது உலகளவில் அதிகபட்ச வெப்பநிலை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதிக்குட்பட்ட அகோலா நகரில் 46.4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையுடன், அதிகளவு வெப்பநிலை நிலவிய 2-வது நகரமாக உள்ளது. மேலும், உலகளவில் அதிகபட்ச வெப்பநிலையைக் கொண்ட முதல் 15 நகரங்களின் பட்டியலில் விதர்பா பகுதியில் மட்டும் 6 இடங்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய பிரதேசத்தின் கந்த்வா 45.1 டிகிரி செல்சியசுடன் 10-வது இடமும், ஓசங்காபாத் 44.7 டிகிரி செல்சியசுடன் 13-வது இடத்தையும் பிடித்துள்ளது. 

1901-ம் ஆண்டு முதல் அதிகபட்ச வெப்பநிலை நிலவிய ஆண்டாக 2018-ம் ஆண்டை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால், தற்போது நிலவி வரும் வெப்பநிலை, அந்த புள்ளி விபரங்களை மாற்றிவிடுமோ என்ற அளவிற்கு உள்ளது. சாதாரண கோடை நாட்களை விட மத்திய இந்தியாவில் உள்ள பெரும்பாலான நகரங்களில் 0.5 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...