கோவை : கோவையில் பேருந்தில் பயணியிடம் நகை பறிக்க முயன்று தப்பியோடிய 4 பெண்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கோவை : கோவையில் பேருந்தில் பயணியிடம் நகை பறிக்க முயன்று தப்பியோடிய 4 பெண்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
நேற்று கோவை டவுன்ஹால் பகுதியில் இருந்து பேரூர் நோக்கி ஒரு தனியார் பேருந்து சென்றுள்ளது. அப்பேருந்தில் கைக்குழந்தையுடன் 4 பெண்கள் ஏறியுள்ளனர். கூட்டமாக இருந்த பேருந்தில் கைக்குழந்தையுடன் இருந்த பெண் மற்றும் உடனிருந்த இன்னொரு பெண்ணிற்கும் அமர இடமளித்துள்ளனர். பேருந்து சென்று கொண்டிருக்கும் போது, முன்பக்க சீட்டில் அமர்ந்திருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்றுள்ளனர். இதனை பார்த்த சக பயணிகள் அவர்களை மடக்கி பிடித்தனர். வைசியாள் வீதியில் பேருந்தை நிறுத்தியதும், நான்கு பெண்களும் பேருந்தில் இருந்து குதித்து தப்பி ஓடினர். கெம்பட்டி காலணி பகுதிக்குள் ஓடிய பெண்களை, சில பேருந்து பயணிகள் பின்தொடர்ந்து ஓடி பிடிக்க முயன்றனர். திருடர், திருடர் என சத்தமிட்டதால், ஓடிய 4 பெண்களையும் அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து, 4 பேரையும் சராமரியாக அடித்து உதைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கடைவீதி காவல்துறையினரிடம் 4 பேரையும் பொதுமக்கள் ஒப்படைத்தனர். 4 பெண்களையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.