கோவை : தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக பொய்யான தகவலை கொடுத்த லாரி ஓட்டுநரை கர்நாடகா போலீசார் கைது செய்தனர்.
கோவை : தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக பொய்யான தகவலை கொடுத்த லாரி ஓட்டுநரை கர்நாடகா போலீசார் கைது செய்தனர்.
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கோவா, புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக லாரி ஓட்டுநர் ஒருவர் தகவல் கொடுத்தார். இதனடிப்படையில், சம்பந்தப்பட்ட மாநில டி.ஜி.பி.க்களுக்கு கர்நாடாக மாநில டி.ஜி. மற்றும் ஐ.ஜி.பி. ஆகியோர் தகவல் அனுப்பியிருந்தனர்.
அந்தக் கடிதத்தில், லாரி ஓட்டுநர் ஒருவர் அளித்துள்ள தகவலின்படி, தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாகவும், குறிப்பாக, தமிழகம்,
ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கோவா, புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இயங்கும் ரயில்களில் இந்த தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கர்நாடகா போலீசார் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், தீவிரவாத தாக்குதல் நடத்த இருப்பதாக பொய்யான தகவலை கொடுத்த லாரி ஓட்டுநரை கர்நாடகா போலீசார் கைது செய்தனர்.
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கோவா, புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக லாரி ஓட்டுநர் ஒருவர் தகவல் கொடுத்தார். இதனடிப்படையில், சம்பந்தப்பட்ட மாநில டி.ஜி.பி.க்களுக்கு கர்நாடாக மாநில டி.ஜி. மற்றும் ஐ.ஜி.பி. ஆகியோர் தகவல் அனுப்பியிருந்தனர்.
அந்தக் கடிதத்தில், லாரி ஓட்டுநர் ஒருவர் அளித்துள்ள தகவலின்படி, தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாகவும், குறிப்பாக, தமிழகம்,
ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கோவா, புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இயங்கும் ரயில்களில் இந்த தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கர்நாடகா போலீசார் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், தீவிரவாத தாக்குதல் நடத்த இருப்பதாக பொய்யான தகவலை கொடுத்த லாரி ஓட்டுநரை கர்நாடகா போலீசார் கைது செய்தனர்.