கோவை : இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்திய குழுவுக்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என கோவையை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் தெரிவித்துள்ளார்.
கோவை : இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்திய குழுவுக்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என கோவையை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தேவாலயங்களிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய உளவுத்துறை ஏற்கனவே இலங்கைக்கு தகவல்கள் அளித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் கோவையில் அர்ஜுன் சம்பத் மற்றும் சில இந்து அமைப்பு தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என தகவல்கள் தொடர்ந்து வெளியானது.
இந்த நிலையில், இந்து அமைப்பு தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிக் ,தங்களை வேண்டுமென்றே தீவிரவாதமாக சித்தரிக்க தேசிய முகமை செயல்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது : இலங்கையில் வெடிகுண்டு வெடித்த சம்பவத்திற்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால், வேண்டுமென்றே என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவர்கள் நற்பெயர் எடுக்க எங்களை பலியாக்குகின்றனர். மேலும், தடை செய்யப்பட்ட அமைப்புக்கும், எங்களுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்ட குற்றச் சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லாததால், தற்போது நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்துள்ளோம். எனக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை பற்றி எதுவுமே தெரியாது. என்னை கைது செய்த பிறகு தான், அந்த அமைப்பை பற்றி தெரிந்து கொண்டேன். என்.ஐ.ஏ அதிகாரிகள் இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக என்னிடம் எதுவும் விசாரணை நடத்தவில்லை. விசாரணை மேற்கொண்டால் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம், என தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தேவாலயங்களிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய உளவுத்துறை ஏற்கனவே இலங்கைக்கு தகவல்கள் அளித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் கோவையில் அர்ஜுன் சம்பத் மற்றும் சில இந்து அமைப்பு தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என தகவல்கள் தொடர்ந்து வெளியானது.
இந்த நிலையில், இந்து அமைப்பு தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிக் ,தங்களை வேண்டுமென்றே தீவிரவாதமாக சித்தரிக்க தேசிய முகமை செயல்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது : இலங்கையில் வெடிகுண்டு வெடித்த சம்பவத்திற்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால், வேண்டுமென்றே என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவர்கள் நற்பெயர் எடுக்க எங்களை பலியாக்குகின்றனர். மேலும், தடை செய்யப்பட்ட அமைப்புக்கும், எங்களுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்ட குற்றச் சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லாததால், தற்போது நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்துள்ளோம். எனக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை பற்றி எதுவுமே தெரியாது. என்னை கைது செய்த பிறகு தான், அந்த அமைப்பை பற்றி தெரிந்து கொண்டேன். என்.ஐ.ஏ அதிகாரிகள் இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக என்னிடம் எதுவும் விசாரணை நடத்தவில்லை. விசாரணை மேற்கொண்டால் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம், என தெரிவித்தார்.