விதிகளை மீறி உயர் பாதுகாப்பு பதிவெண் பலகையை விற்பனை செய்து வருவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

கோவை : உயர் பாதுகாப்பு பதிவெண் பலகைக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்காத நிலையில், விதிகளை மீறி விற்பனை செய்து வரும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விளம்பரப் பல்தொழில் தயாரிப்பாளர் நலச்சங்கத்தினர் கோவை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.


கோவை : உயர் பாதுகாப்பு பதிவெண் பலகைக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்காத நிலையில், விதிகளை மீறி விற்பனை செய்து வரும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விளம்பரப் பல்தொழில் தயாரிப்பாளர் நலச்சங்கத்தினர் கோவை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். 



இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது :- இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மோட்டார் வாகனங்களுக்கான ஐ.என்.டி. என்ற குறியீடு கொண்ட உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகை தமிழகத்தில் இதுவரை அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்த உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகை திட்டத்தின்படி "ஐ.என்.டி.' என்ற குறியீடு கொண்ட போலி நம்பர் பிளேட்டுகளை வாகனங்களில் பொருத்துவது சட்டப்படி குற்றமாகும். ஆனால், கேரளாவைச் சேர்ந்த மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் தமிழகத்தில், குறிப்பாக கோவையில் இந்த வியாபாரத்தை சட்டவிரோதமாக செய்து வருகிறது. இப்படி சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேவேளையில், இந்த சட்டவிரோத தயாரிப்புகளில் எங்கள் சங்க உறுப்பினர்கள் யாரும் ஈடுபடவில்லை என்பதையும் காவல்துறைக்கு தெரிவித்துக் கொள்கிறோம், என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...