அரசுக்கு எதிராக செயல்படும் மேலும் 4 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய முடிவு..?

டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மற்றும் அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் அரசுக்கு எதிராக செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்க சபாநாயகர் முடிவு செய்துள்ளார்.

டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மற்றும் அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் அரசுக்கு எதிராக செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்க சபாநாயகர் முடிவு செய்துள்ளார். 

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான வி.டி. கலைச்செல்வன் (விருதாச்சலம்), இ. ரத்தினசபாபதி (அறந்தாங்கி) மற்றும் ஏ. பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய மூவரும் டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்களாக உள்ளனர். மேலும், அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் தற்போது, அ.தி.மு.க.விற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளனர். எம்.எல்.ஏ. கருணாஸ் அவ்வப்போது அரசுக்கு ஆதரவாகவும் இருப்பதால், 3 டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தி.மு.க. ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி மீது மட்டும் நடவடிக்கை எடுக்க அரசு கொறடா சார்பில் சபாநாயகரிடம் கோரிக்கை விடப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இதையடுத்து, கலைச்செல்வன், பிரபு, ரத்தினசபாபதி மற்றும் தமிமுன் அன்சாரி ஆகிய 4 பேரிடமும் சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்க உள்ளார். 4 பேர் அளிக்கும் விளக்கத்தை அடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநரிடம் புகார் கடிதம் அளித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, 113 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் பெரும்பான்மை இன்றி இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு, மேலும் 4 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் பெரும் நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...