சூலூர் இடைத்தேர்தலில் பாரபட்சம் : நாம் தமிழர் கட்சியினர் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு

கோவை : சூலூர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் போது, பாரபட்சத்துடன் செயல்படுவதாக போலீசாருடன், நாம் தமிழர் கட்சியினர் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.


கோவை : சூலூர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் போது, பாரபட்சத்துடன் செயல்படுவதாக போலீசாருடன், நாம் தமிழர் கட்சியினர் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. 



வரும் மே மாதம் 19-ம் தேதி நடக்கும் சூலூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூலூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று காலை முதல் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்து வருகின்றனர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் விஜயராகவன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது, அவரது வாகனத்தை அனுமதிக்காத போலீஸார், வேட்பாளர் விஜயராகவன் உடன் நான்கு நபர்களை மட்டும் அனுமதித்தனர்.



ஆனால் இதைத் தொடர்ந்து, வந்த தி.மு.க.வின் வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை வாகனத்தோடு செல்ல போலீஸார் சம்மதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாம் தமிழர் கட்சியினர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பொங்கலூர் பழனிச்சாமியின் வாகனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு, கட்சி நிர்வாகிகளுடன் உள்ளே சென்றார்.

பின்னர், செய்தியாளர்களிடம் சூலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஜயராகவன் கூறுகையில், "நீர் ஆதாரங்களின் பிரச்சனையை மையப்படுத்தி பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றோம். தேர்தல் விதிமுறைப்படி 100 மீட்டர் முன்பாகவே எங்கள் வாகனம் நிறுத்தப்பட்டது. ஆனால், தி.மு.க. வேட்பாளர் வாகனம் மட்டும் வாயில் வரை அனுமதிக்கப்படுகின்றது. இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க இருக்கின்றோம்," என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...