கோடையில் கை கொடுக்கும் செண்டுமல்லி : அதிக விளைச்சலும், உரிய விலையும் கிடைப்பதால் மலர் விவசாயிகள் மகிழ்ச்சி

கோவை : கோடை கால பயிரான செண்டுமல்லி, அதிக விளைச்சலும், அதற்கேற்ற விலையும் கிடைப்பதால் மேட்டுப்பாளையம் மலர் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை : கோடை கால பயிரான செண்டுமல்லி, அதிக விளைச்சலும், அதற்கேற்ற விலையும் கிடைப்பதால் மேட்டுப்பாளையம் மலர் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறைந்தளவு தண்ணீர் தேவையுள்ள குறுகிய கால பயிரான செண்டுமல்லி அதிகளவில் நடவு செய்யப்பட்டுள்ளது. கோடை காலத்தில் அதிகம் தண்ணீர் தேவையுள்ள பயிர்களை சாகுபடி செய்வதற்கு பதிலாக, குறுகிய காலத்தில் குறைந்த தண்ணீர் தேவையுள்ள பயிர்களை பயிரிடுவதால் வறட்சியை சமாளிக்க இயலும். மேட்டுப்பாளையம் வட்டத்தில் இவ்வாண்டு போதிய மழை இல்லாத காரணத்தினால், அதிக பாசனம் தேவைப்படும் பயிர்களை பயிரிடாமல், 60 நாள் பயிரான செண்டுமல்லியினை வளர்க்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.



செண்டுமல்லி செடிகளுக்கு குறைந்தளவு நீரே போதுமானது என்பதால், இவை கோடைக்கு ஏற்ற பயிராக உள்ளது. சொட்டு நீர் பாசனம் செய்தால் மேலும் தண்ணீரை மிச்சப்படுத்தலாம் என தெரிவிக்கும் விவசாயிகள், செண்டுமல்லியினை தனியாகவும் நடவு செய்யலாம் என்றும், பிற விவசாய பயிர்களோடு ஊடு பயிராகவும் நடவு செய்யலாம் என்றும் கூறுகின்றனர். மேலும், குறுகிய கால பயிர் என்பதால் பயிரிட்ட குறைந்த நாட்களிலேயே அறுவடை செய்து பலன் பெறலாம் என்றும் அவர்கள் சொல்கின்றனர். தற்போது, மஞ்சள் செண்டுமல்லி கிலோ ரூ. 100 வரையிலும், சிகப்பு செண்டுமல்லி கிலோ ரூ. 70 வரையிலும் விலை போகிறது. கோடை காலத்தில், செண்டுமல்லியின் விளைச்சலும் அதிகரித்து, நல்ல விலையும் கிடைப்பதால் இப்பகுதி மலர் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...