சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி சாலைகளை சீரமைக்க நீலகிரி சுற்றுலா வாகன ஓட்டிகள் கோரிக்கை

நீலகிரி : நீலகிரியில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், பழுதடைந்துள்ள பெரும்பாலான சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா வாகன ஓட்டிகள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

நீலகிரி : நீலகிரியில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், பழுதடைந்துள்ள பெரும்பாலான சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா வாகன ஓட்டிகள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர். 

நீலகிரி மாவட்டத்தில் தற்போது ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கி விட்டனர். வரும் மே மாதம் முடியும் வரை சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் அதிகளவு வந்து செல்வார்கள். சாலை பழுதடைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் மட்டுமின்றி, உள்ளூர் வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், புழுதியின் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில், நகராட்சிக்குட்பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



மேலும், அனைத்து சாலையோரங்களிலும் கேபிள் பதிப்பதற்காகத் தோண்டப்பட்ட பள்ளங்களை மூட வேண்டும். தற்போது ஒருசில சாலைகளில் மட்டும் பேட்ச் ஒர்க் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான சாலைகள் பழுதடைந்தே காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, பழுதடைந்த அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும். முதற்கட்டமாக, அனைத்து பழுதடைந்த சாலைகளில் உள்ள பள்ளங்களை மூட வேண்டும். மே மாதம் தொடங்கும் முன் அனைத்து சாலைகளையும் சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...