கோவை : கோவையில் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் 34-வது அரசு பொருட்காட்சியை செய்தித்துறை இயக்குநர் சங்கர் இன்று தொடங்கி வைத்தார்.
கோவை : கோவையில் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் 34-வது அரசு பொருட்காட்சியை செய்தித்துறை இயக்குநர் சங்கர் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு சார்பில் வருடந்தோறும் அரசு பொருட்காட்சி பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. இதன் ஒருபகுதியாக இந்த ஆண்டு கோவையில் 34-வது அரசு பொருட்காட்சியை செய்தித்துறை இயக்குநர் சங்கர் இன்று தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை, சமூகநல துறை, சுற்றுலா, வனத்துறை, காவல்துறை, வேளாண் துறை, பள்ளிக் கல்வி துறை உள்ளிட்ட 27 அரசு துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக ராட்சத ராட்டினம், டோரா டோரா, கப் & சாசர் உள்ளிட்ட பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இன்று முதல் 45 நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை பொதுமக்கள் இந்தக் கண்காட்சியை பார்வையிட அனுமதிக்கப்படுவர். பெரியவர்களுக்கு ரூ. 15-ம், குழந்தைகளுக்கு ரூ. 10-ம் நுழைவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது தவிர, தனியார் விற்பனை நிலையங்களும் இங்கு அமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கண்காட்சியானது, குழந்தைகளுக்கு கோடை விடுமுறையை குதூகலமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ், காவல்துறை துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) பாலாஜி சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தமிழக அரசு சார்பில் வருடந்தோறும் அரசு பொருட்காட்சி பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. இதன் ஒருபகுதியாக இந்த ஆண்டு கோவையில் 34-வது அரசு பொருட்காட்சியை செய்தித்துறை இயக்குநர் சங்கர் இன்று தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை, சமூகநல துறை, சுற்றுலா, வனத்துறை, காவல்துறை, வேளாண் துறை, பள்ளிக் கல்வி துறை உள்ளிட்ட 27 அரசு துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக ராட்சத ராட்டினம், டோரா டோரா, கப் & சாசர் உள்ளிட்ட பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இன்று முதல் 45 நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை பொதுமக்கள் இந்தக் கண்காட்சியை பார்வையிட அனுமதிக்கப்படுவர். பெரியவர்களுக்கு ரூ. 15-ம், குழந்தைகளுக்கு ரூ. 10-ம் நுழைவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது தவிர, தனியார் விற்பனை நிலையங்களும் இங்கு அமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கண்காட்சியானது, குழந்தைகளுக்கு கோடை விடுமுறையை குதூகலமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ், காவல்துறை துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) பாலாஜி சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
