வெள்ளியங்கிரி யாத்ரீகம் மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டவர் பலி : நடப்பாண்டில் மட்டும் 4 பேர் உயிரிழப்பு

கோவை : வெள்ளியங்கிரி மலை யாத்திரை மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முதியவர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டில் மட்டும் வெள்ளியங்கிரி மலை யாத்திரையின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

கோவை : வெள்ளியங்கிரி மலை யாத்திரை மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முதியவர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டில் மட்டும் வெள்ளியங்கிரி மலை யாத்திரையின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி என்ற இடத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. தென்கயிலாயம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அந்த வகையில், கடந்த சனிக்கிழமை (ஏப்.,20) ஆயிரக்கணக்கான பக்தர்கள், வெள்ளியிங்கிரி மலையில் யாத்திரை மேற்கொண்டனர். அவர்களுடன் வெளிநாட்டைச் சேர்ந்த 3 பேர் கொண்ட குழுவினர் மலையேறினர். அவர்கள் 5-வது மலையை அடைந்த போது மூச்சுத்திணறல் காரணமாக வெளிநாட்டுக் குழுவினரைச் சேர்ந்த முதியவர்,எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். 

பின்னர், வனத்துறையினர் உடலை மலையில் இருந்து கீழ்பகுதிக்கு எடுத்து வந்தனர். மேலும், இது தொடர்பாக ஆலந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அரவுல்டஸே மஸேனா (59) என்பது தெரிய வந்தது. மேலும், இவர் பாண்டிச்சேரியில் வசித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, திங்கட்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இதன்மூலம், இந்த ஆண்டில் மட்டும் வெள்ளியங்கிரி யாத்திரை மேற்கொண்ட போது, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக, கடந்த 19-ம் தேதி சென்னையை சேர்ந்த 32 வயது நபர் ஒருவர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...