கோவை : மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையிலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், கோவை மாவட்டத்தில் பறக்கும் படையினரின் சோதனை தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை : மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையிலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், கோவை மாவட்டத்தில் பறக்கும் படையினரின் சோதனை தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்களவை தேர்தல் அறிவிப்பு கடந்த மார்ச் 10-ம் தேதி வெளியானது. அன்று முதல் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனையடுத்து, கோவை மாவட்டத்தில் வீடியோ குழுவினர் 20, சோதனை சாவடி குழுவினர் 30, பறக்கும் படையினர் 30 என மொத்தம் 80 தேர்தல் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. மக்களவை தேர்தல் முடிவுகளுக்கும், சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளும் மே 23-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், மக்களவை தேர்தல் முடிந்தாலும் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தேர்தல் விதிமுறைகள் திரும்பப் பெறும் வரை தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதால், அந்த ஒரு தொகுதியில் மட்டும் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுவார்கள் என கருத வேண்டாம். தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் கோவை மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினரின் சோதனை தொடரும். இதுவரை கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 13 கோடி ரூபாய் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றதாக பறிமுதல் செய்யப்பட்டு, அதில் சுமார் 3 கோடி வரை ஆவணங்கள் ஒப்படைத்ததால் திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது," என்றார்.
மக்களவை தேர்தல் அறிவிப்பு கடந்த மார்ச் 10-ம் தேதி வெளியானது. அன்று முதல் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனையடுத்து, கோவை மாவட்டத்தில் வீடியோ குழுவினர் 20, சோதனை சாவடி குழுவினர் 30, பறக்கும் படையினர் 30 என மொத்தம் 80 தேர்தல் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. மக்களவை தேர்தல் முடிவுகளுக்கும், சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளும் மே 23-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், மக்களவை தேர்தல் முடிந்தாலும் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தேர்தல் விதிமுறைகள் திரும்பப் பெறும் வரை தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதால், அந்த ஒரு தொகுதியில் மட்டும் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுவார்கள் என கருத வேண்டாம். தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் கோவை மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினரின் சோதனை தொடரும். இதுவரை கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 13 கோடி ரூபாய் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றதாக பறிமுதல் செய்யப்பட்டு, அதில் சுமார் 3 கோடி வரை ஆவணங்கள் ஒப்படைத்ததால் திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது," என்றார்.