கோவையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

கோவை : கோவை மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞர் மீது, கோவை மாநகர காவல் துணை ஆணையரின் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோவை : கோவை மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞர் மீது, கோவை மாநகர காவல் துணை ஆணையரின் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டம் பாய்ந்தது. 

ராமநாதபுரம் காவல்நிலைய சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் வந்து கொண்டிருந்த டி.ஜி. வாசு (47) என்பவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ரூ. 500 பறித்துச் சென்றதாக பரத் காந்தி (23) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தற்போது கோவை மத்திய சிறையில் விசாரணை கைதியாக வைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், ராமநாதபுரம், போத்தனூர், சரவணம்பட்டி உள்ளிட்ட கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதி காவல்நிலையங்களில் பரத் காந்தி மீது வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே, தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால், கோவை மாநகர துணை ஆணையர் மற்றும் கோவை மாநகர சட்டம் ஒழுங்கு தெற்கு உதவி ஆணையர் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், இளைஞர் பரத் காந்தியை ஓராண்டு குண்டர் தடுப்புக் காவலில் வைக்க நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...