வாரணாசியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், அஜய் ராஜை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக இன்று அறிவித்துள்ளது.
வாரணாசியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், அஜய் ராஜை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக இன்று அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கு நான்காவது கட்டமான வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். பிரமாண்ட பேரணியாக சென்று அவர் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று பா.ஜ.க. அறிவித்துள்ளது.

இதனிடையே, வாரணாசியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்தியை களமிறக்கலாம் என்று பேசப்பட்டது. இந்த தகவலை அக்கட்சி எந்த இடத்திலும் மறுக்கவில்லை. இந்த நிலையில், பிரியங்கா காந்தி போட்டி என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள காங்கிரஸ் கட்சி, கடந்த 2015-ம் ஆண்டு மோடியை எதிர்த்து போட்டியிட்ட அஜய் ராஜ் என்பவரை மீண்டும் இன்று வாரணாசி வேட்பாளராக அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கு நான்காவது கட்டமான வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். பிரமாண்ட பேரணியாக சென்று அவர் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று பா.ஜ.க. அறிவித்துள்ளது.

இதனிடையே, வாரணாசியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்தியை களமிறக்கலாம் என்று பேசப்பட்டது. இந்த தகவலை அக்கட்சி எந்த இடத்திலும் மறுக்கவில்லை. இந்த நிலையில், பிரியங்கா காந்தி போட்டி என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள காங்கிரஸ் கட்சி, கடந்த 2015-ம் ஆண்டு மோடியை எதிர்த்து போட்டியிட்ட அஜய் ராஜ் என்பவரை மீண்டும் இன்று வாரணாசி வேட்பாளராக அறிவித்துள்ளது.