நீலகிரி : மலர் கண்காட்சிக்காக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் நாற்றுகளில் பல்வேறு மலர்கள் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
நீலகிரி : மலர் கண்காட்சிக்காக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் நாற்றுகளில் பல்வேறு மலர்கள் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழாவிற்காக வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக, தோட்டக்கலைத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கோடை விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக, உலக புகழ் பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்துவது வழக்கம். இந்தாண்டு மலர் கண்காட்சி வரும் மே 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்காக , அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு பணிகள் துரித கதியில் நடைப்பெற்று வருகிறது.

தற்போது, 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பெட்டூனியா, சால்வியா, டேலியா உள்ளிட்ட 90 வகையான மலர்கள் தற்போது பூத்து குலுங்குகிறது. இதேப் போன்று, சால்வியா, டேலியா போன்ற பல வண்ண மலர்களும் பூத்து குலுங்குகின்றன. தற்போது உதகையில் குளுகுளு காலநிலை நிலவுவதாலும், மலர்கள் பூத்து குலுங்குவதாலும் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வெகுவாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
