சின்ன வெங்காயம் கொள்முதல் விலை உயர்வு : திருப்பூர் விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பூர் : சின்ன வெங்காய அறுவடை தொடங்கியுள்ள நிலையில், அதன் கொள்முதல் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.


திருப்பூர் : சின்ன வெங்காய அறுவடை தொடங்கியுள்ள நிலையில், அதன் கொள்முதல் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் குண்டடம், கொடுவாய், தாராபுரம், குடிமங்கலம் மற்றும் காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது அறுவடை பணிகள் துவங்கியுள்ளது. ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்து உற்பத்தி செய்தபோதும், விலை இறக்கம் காரணமாக கடந்த வாரம் வரை விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், அறுவடை செய்த சின்ன வெங்காயத்தை சேமித்து வைத்திருந்து தற்போது விற்பனை செய்து வருகின்றனர். 



கடந்த மாதம் ரூ.12-க்கு கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயம் தற்போது 30 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை வியாபாரிகள் வாங்கி செல்வதால், இந்த விலை உயர்வு ஓரளவு கட்டுபடியாவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

சின்ன வெங்காயத்தின் கொள்முதல் விலை ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வரும் நிலையில், உற்பத்தி செய்த சின்ன வெங்காயத்தினை பாதுகாக்க குண்டடம் பகுதியில் சேமிப்பு கிடங்கு ஒன்றை அமைத்தால், உற்பத்தி அதிகமாகும் காலங்களில் சேமித்து வைத்து, பற்றாக்குறை ஏற்படும் போது விற்பனை செய்தால் விலையும் நிலையாக இருப்பதோடு, விவசாயிகளும் நஷ்டம் அடையாமல் இருக்க முடியும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...