கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக சமூக நீதிக்கட்சியின் வேட்பாளர் கணேசன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்
கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக சமூக நீதிக்கட்சியின் வேட்பாளர் கணேசன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், சமூக நீதிக்கட்சி சார்பில் போட்டியிடும் கணேசன் என்பவர் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான பாலகிருஷ்ணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசன், அக்கட்சியில் அமைப்பு செயலாளராக உள்ளார். சமூக நீதிக்கட்சி பதிவு செய்யப்படாத காரணத்தினால், சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
இதையடுத்து, சுயேட்சை வேட்பாளர் கணேசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததாவது :- சூலூர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவதே தனது முதல் குறிக்கோள். தேர்தலில் வெற்றி பெற்றால் தட்கோ கடன் பெற்று தருதல், வீடில்லா ஏழை மக்களுக்கு வீடு கட்டி தருதல், பஞ்சமி நிலங்கள் மீட்பு உள்ளிட்ட பணிகளை செய்வேன். அருந்ததிய மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும், அருந்ததிய மக்களுக்கு சட்டமன்றத்தில் குரல் கொடுக்கும் வகையிலும் தேர்தலில் போட்டியிடுகிறேன், என அவர் கூறினார்.
சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், சமூக நீதிக்கட்சி சார்பில் போட்டியிடும் கணேசன் என்பவர் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான பாலகிருஷ்ணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசன், அக்கட்சியில் அமைப்பு செயலாளராக உள்ளார். சமூக நீதிக்கட்சி பதிவு செய்யப்படாத காரணத்தினால், சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
இதையடுத்து, சுயேட்சை வேட்பாளர் கணேசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததாவது :- சூலூர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவதே தனது முதல் குறிக்கோள். தேர்தலில் வெற்றி பெற்றால் தட்கோ கடன் பெற்று தருதல், வீடில்லா ஏழை மக்களுக்கு வீடு கட்டி தருதல், பஞ்சமி நிலங்கள் மீட்பு உள்ளிட்ட பணிகளை செய்வேன். அருந்ததிய மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும், அருந்ததிய மக்களுக்கு சட்டமன்றத்தில் குரல் கொடுக்கும் வகையிலும் தேர்தலில் போட்டியிடுகிறேன், என அவர் கூறினார்.
சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.