கோவை : சூலூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக வழக்கறிஞர் விஜயராகவன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கோவை : சூலூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக வழக்கறிஞர் விஜயராகவன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த விஜயராகவனுக்கு பிரியா என்ற மனைவியும், மகிழன், மதிவதினி ஆகிய குழந்தைகள் உள்ளனர். 34 வயதான இவர் கடந்த 12 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். நாம் தமிழர் கட்சி தொடங்கியதில் இருந்து, அக்கட்சியில் இருக்கிறார். தற்போது நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞர் பாசறை செயலாளராகவும், கோவை கிழக்கு மண்டல செயலாளராகவும் உள்ளார். கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களின் பொறுப்பாளராக பதவி வகித்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சூலூர் தொகுதியில் போட்டியிட்டு, 2,873 வாக்குகள் பெற்று, 7-வது இடம் பிடித்தார். இந்த நிலையில், இரண்டாவது முறையாக மீண்டும் சூலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுவை வரும் 26-ம் தேதி தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த விஜயராகவனுக்கு பிரியா என்ற மனைவியும், மகிழன், மதிவதினி ஆகிய குழந்தைகள் உள்ளனர். 34 வயதான இவர் கடந்த 12 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். நாம் தமிழர் கட்சி தொடங்கியதில் இருந்து, அக்கட்சியில் இருக்கிறார். தற்போது நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞர் பாசறை செயலாளராகவும், கோவை கிழக்கு மண்டல செயலாளராகவும் உள்ளார். கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களின் பொறுப்பாளராக பதவி வகித்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சூலூர் தொகுதியில் போட்டியிட்டு, 2,873 வாக்குகள் பெற்று, 7-வது இடம் பிடித்தார். இந்த நிலையில், இரண்டாவது முறையாக மீண்டும் சூலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுவை வரும் 26-ம் தேதி தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.