சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் களமிறங்குகிறார் விஜயராகவன்..?

கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் விஜயராகவன் வேட்பாளராக அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் விஜயராகவன் வேட்பாளராக அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கடந்த 18-ம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 தொகுதிகளுக்கு தேர்தலை நடத்தியது. மீதம் உள்ள நான்கு தொகுதிகளான சூலூர், அரவகுறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டபிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் மே 19-ம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், இதற்கான வேட்புமனு தாக்கலும் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து, தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வினர் ஏற்கனவே தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். இதையடுத்து, அ.தி.மு.க. வேட்பாளர்களும் இன்று அறிவிக்கப்பட்டனர். 

இந்த நிலையில், சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் இன்னும் அறிவிக்காமலே இருக்கின்றன. மேலும், நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் விஜயராகவன் களமிறக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த திங்கட்கிழமை முதல் சூலூர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், முதல் நாளில் அதிக முறை தேர்தலில் போட்டியிட்டுள்ள 'தேர்தல் மன்னன்' நூர் முகமது முதலாவதாக வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...