பூளுவாம்பட்டியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் : அலட்சியம் காட்டும் மாநகராட்சி அதிகாரிகள்

கோவை : பூளுவாம்பட்டியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகி வரும் நிலையில், அதனை சரிசெய்ய வேண்டிய அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.


கோவை : பூளுவாம்பட்டியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகி வரும் நிலையில், அதனை சரிசெய்ய வேண்டிய அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.



தமிழகம் முழுவதும் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எனவே, குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதால், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிறுவாணி அருகே பூளுவாம்பட்டியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அத்திக்கடவு குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. 



இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால், இந்தப் புகார் மீது கோவை மாநகராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...