மேட்டுப்பாளையத்தில் மின்சாரம் பாய்ந்து காட்டு யானை உயிரிழப்பு : வனத்துறையினர் விசாரணை

கோவை : மேட்டுப்பாளையம் அருகே மின்சாரம் தாக்கியதில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : மேட்டுப்பாளையம் அருகே மின்சாரம் தாக்கியதில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள நெல்லித்துறை வனப்பகுதி எல்லையருகே உள்ள இரானி மகால் காரருக்கு சொந்தமான ஆறு ஏக்கர் பாக்கு தோப்பு உள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று உணவு தேடி இந்த தோப்புக்குள் புகுந்துள்ளது. அங்கிருந்த ஒரு பாக்கு மரத்தை முறித்து சாய்க்க முயன்ற போது, மரத்தின் அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது மரம் சாய்ந்துள்ளது. இதனால், உயரழுத்த மின் கம்பிகள் மீது மரம் உரசிய போது, யானையின் உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது. மேலும், மின்கம்பமும் சரிந்து யானையின் அருகே மின் கம்பிகள் அறுந்து விழுந்தது. இதனால், மின் அதிர்ச்சி தாளாமல் யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. 



இது குறித்து தகவல் கிடைக்க பெற்றதும், சம்பவ இடத்திற்கு சென்ற மேட்டுப்பாளையம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மின்கம்பம் அருகே உயரமாக நீண்டு வளரும் தன்மையுடைய பாக்கு மரம் வளர்க்கப்பட்டுள்ளதும், நள்ளிரவில் இப்பகுதியில் பெய்த சாரல் மழையால் மரத்தில் இருந்த ஈரம் காரணமாகவும், மரம் சாய்க்கப்பட்ட போது யானையின் உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. தொடர்புடைய பாக்குத்தோப்பு உரிமையாளரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. வனத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் யானைகளுக்கு பிடித்தமான வாழை, பாக்கு, கரும்பு உள்ளிட்டவைகளை பயிரிடாமல் மஞ்சள், அவரை, மிளகாய் போன்றவற்றை பயிரிட வனத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...