கோவை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால், கருமத்தம்பட்டியைச் சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால், கருமத்தம்பட்டியைச் சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராபர்ட் கென்னடி மற்றும் சாந்தி தம்பதியினர். இவர்களின் மகள் சரோன் ரிச்சா, காடுவெட்டி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். அண்மையில் நடந்து முடிந்த பொதுத்தேர்வில் மாணவி சரோன் ரிச்சா, இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதனால், கடந்த இரண்டு நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டு வந்தார்.
இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதியம் வீட்டிற்கு வந்த அவரது தாய் சாந்தி, மகள் தூக்கிட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், தாயாரின் அழுகுரல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சரோன் ரிச்சாவை மீட்டு பரிசோதனை செய்ததில், மாணவி இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு கோவை அரசு கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராபர்ட் கென்னடி மற்றும் சாந்தி தம்பதியினர். இவர்களின் மகள் சரோன் ரிச்சா, காடுவெட்டி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். அண்மையில் நடந்து முடிந்த பொதுத்தேர்வில் மாணவி சரோன் ரிச்சா, இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதனால், கடந்த இரண்டு நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டு வந்தார்.
இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதியம் வீட்டிற்கு வந்த அவரது தாய் சாந்தி, மகள் தூக்கிட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், தாயாரின் அழுகுரல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சரோன் ரிச்சாவை மீட்டு பரிசோதனை செய்ததில், மாணவி இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு கோவை அரசு கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.