கோவை : சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்பே இடைத்தேர்தல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அ.தி.மு.க. நியமித்துள்ளது.
கோவை : சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்பே இடைத்தேர்தல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அ.தி.மு.க. நியமித்துள்ளது.
தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கடந்த 18-ம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 தொகுதிகளுக்கு தேர்தலை நடத்தியது. மீதம் உள்ள நான்கு தொகுதிகளான சூலூர், அரவகுறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டபிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் மே 19ம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வினர் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். தி.மு.க. தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களை ஏற்கனவே அறிவித்து விட்டது.
இன்று அ.ம.மு.க. வேட்பாளர்களை அறிவித்த நிலையில், தமிழக பிரதான கட்சியான அ.தி.மு.க. வேட்பாளரை அறிவிக்காமலேயே தேர்தல் பணிக்குழுவை தலைமை கழகம் இன்று அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் கழக உறுப்பினரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு கோவை புறநகர், மாநகர், திருப்பூர் மாநகர், புறநகர், நீலகிரி, நாகபட்டினம், விழுப்புரம் வடக்கு, தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, மேற்கு, பெரம்பலூர், தென் சென்னை வடக்கு, வட சென்னை வடக்கு (மேற்கு) சேர்ந்த தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், கழக செய்தி தொடர்பாளர்கள், முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியில் அனைத்து பொறுபாளர்களும் பணியாற்றுவார்கள் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.
கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்படாமலேயே தேர்தல் பணிக்குழுவை அ.தி.மு.க. நியமித்து உள்ளது. சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் மறைவிற்கு பின்னர், அங்கு யாருக்கு சீட் வழங்குவது என இன்னும் முடிவு செய்யபடாமல் உள்ளது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் சகோதரர் மாதப்பூர் பாலு மற்றும் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு கொடுப்பது என்ற குழப்பம் காரணமாகவே இன்னும் வேட்பாளர் அறிவிக்கபடவில்லை என சூலூர் பகுதி கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.