கோவையில் வரும் ஜுன் 9-ம் தேதி இளையராஜா பங்கேற்கும் 'ராஜாதி ராஜா' நேரடி இசை நிகழ்ச்சி

கோவை : கோவையில் முதல்முறையாக இசைஞானி இளையராஜா பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் 9-ம் தேதி நடைபெற உள்ளது.


கோவை : கோவையில் முதல்முறையாக இசைஞானி இளையராஜா பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் 9-ம் தேதி நடைபெற உள்ளது. 

இளையராஜாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோட்டில் 'எப்போதும் ராஜா' எனும் பெயரில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் கோவை ரசிகர்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் வகையில், அருண் மீடியாஸ் மற்றும் மஹம் என்டர்பிரைசஸ் சார்பில் வரும் ஜூன் மாதம் 9-ம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் இளையராஜா தலைமையில் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 



இது குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் அருண் மற்றும் ஒய்.ஜி. மதுவந்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அவர்கள் பேசியதாவது :- ஈரோட்டில் 'எப்போதும் ராஜா' எனும் பெயரில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சிக்குப் பிறகு, அடுத்தபடியாக கோவையில் 'ராஜாதி ராஜா' என்ற இன்னிசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில், திரைப்பட முன்னணி பாடகர்கள் மனோ, சித்ரா, உஷா உதூப் உட்பட பல்வேறு முன்னணி பாடகர்கள் மற்றும் பாடகிகள் கலந்து கொண்டு பாட உள்ளனர். குறிப்பாக, 30 பேர் கொண்ட ஹங்கேரி சிம்பொனி இசைக்குழுவினர்கள் இதில் கலந்து கொண்டு இன்னிசை விருந்தை கோவை வாழ் மக்களுக்கு அளிக்க உள்ளனர், எனத் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...