கோவை : சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கோமாளி வேடமணிந்து வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை : சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கோமாளி வேடமணிந்து வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியது. முதல் நபராக கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த தேர்தல் மன்னன் நூர் முகமது வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவர் கோமாளி வேடமணிந்தபடி சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் வந்தார். அப்போது, சாலையில் சென்றவர்கள், சாலையோர கடைகளில் நின்றவர்களிடம் கை குலுக்கி ஆதரவு கேட்டார். இதையடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலரான பாலகிருஷ்ணனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதுவரை 31 முறை தேர்தல்களில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள நூர்முகமது, 32 முறையாக சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். இதேபோல, கள் இயக்கம் சார்பில் கதிரேசன் என்பவர் தேர்தல் நடத்தும் அதிகாரியான பாலகிருஷ்ணனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியது. முதல் நபராக கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த தேர்தல் மன்னன் நூர் முகமது வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவர் கோமாளி வேடமணிந்தபடி சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் வந்தார். அப்போது, சாலையில் சென்றவர்கள், சாலையோர கடைகளில் நின்றவர்களிடம் கை குலுக்கி ஆதரவு கேட்டார். இதையடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலரான பாலகிருஷ்ணனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதுவரை 31 முறை தேர்தல்களில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள நூர்முகமது, 32 முறையாக சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். இதேபோல, கள் இயக்கம் சார்பில் கதிரேசன் என்பவர் தேர்தல் நடத்தும் அதிகாரியான பாலகிருஷ்ணனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.