க.க. சாவடி அருகே வடமாநில இளைஞரின் சடலம் தூக்கில் தொங்கியபடி கண்டெடுப்பு : போலீசார் விசாரணை

கோவை : கோவை மாவட்டம் க.க.சாவடி அருகே மேற்கு வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் உடம்பில் பல்வேறு காயங்களுடன் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை : கோவை மாவட்டம் க.க.சாவடி அருகே மேற்கு வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் உடம்பில் பல்வேறு காயங்களுடன் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

க.க. சாவடி அருகே உள்ள முட்புதரில் இன்று காலை அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் க.க. சாவடி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர், விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.



மேலும், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தூக்கில் தொங்கியவர் மேற்கு வங்க மாநிலம், பிர்பாரா மாவட்டத்தை சேர்ந்த ஸ்வேரன் மார்க்ஸ் என்பது தெரியவந்துள்ளது. அதேபோல, உயிரிழந்தவரின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதால், யாராவது அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா..? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். 

மேலும், இந்த இளைஞர் எதற்காக கோவை வந்துள்ளார் எங்கு தங்கியுள்ளார் என்பது தொடர்பாக போலீசார் விவரங்களை சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவின்பேரில், க.க. சாவடி காவல்நிலைய ஆய்வாளர் மனோஜ் குமார் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...