நீலகிரி : கோத்தகிரி அருகே மூதாட்டியின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்த முயன்றவரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நீலகிரி : கோத்தகிரி அருகே மூதாட்டியின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்த முயன்றவரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோத்தகிரி அருகே மிளிதேன் கிராமத்தில் ஹாலம்மாள் (60) என்பவர் இயற்கை எய்தினார். அவரது உடலை அடக்கம் செய்ய ஊர்பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ராஜ்குமார் என்பவர் குடிபோதையில் ஜீப்பை ஓட்டி வந்து, வேகமாக இடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டார். இதனால், இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் அச்சமடைந்தனர்.
இந்த நிலையில், குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்த முயன்ற ராஜ்குமாரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தும், பல மணி நேரம் கழித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து, குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்தனர். பின்னர், பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கோத்தகிரி அருகே மிளிதேன் கிராமத்தில் ஹாலம்மாள் (60) என்பவர் இயற்கை எய்தினார். அவரது உடலை அடக்கம் செய்ய ஊர்பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ராஜ்குமார் என்பவர் குடிபோதையில் ஜீப்பை ஓட்டி வந்து, வேகமாக இடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டார். இதனால், இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் அச்சமடைந்தனர்.
இந்த நிலையில், குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்த முயன்ற ராஜ்குமாரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தும், பல மணி நேரம் கழித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து, குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்தனர். பின்னர், பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.