கோவை : கோவை மாவட்டம் தூமனூர் பழங்குடியின கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை, வீடு ஒன்றை சேதப்படுத்திய நிலையில், அதில் குடியிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
கோவை : கோவை மாவட்டம் தூமனூர் பழங்குடியின கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை, வீடு ஒன்றை சேதப்படுத்திய நிலையில், அதில் குடியிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தூமனூர் பழங்குடியின கிராமத்தில் சி. பெருமாள் (58) என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை, பெருமாளின் வீட்டில் உணவு ஏதேனும் கிடைக்குமா..? என சோதனையிட்டது. அப்போது, சுற்றுச்சுவர் மற்றும் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதையறிந்து, சுதாரித்துக் கொண்ட பெருமாள் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமின்றியும் வீட்டை விட்டு வெளியேறினர்.
பின்னர், அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் என ஊர் பொதுமக்கள் காட்டு யானையை அங்கிருந்து விரட்டினர். வனங்களில் ஏற்படும் காட்டுத் தீயினால், வனவிலங்குகள் காடுகளை விட்டு வெளியேறி, மனித குடியிருப்புகளுக்கு அருகாமையில் சுற்றித் திரிகின்றன. எனவே, வனப்பகுதிகளை ஒட்டியுள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தூமனூர் பழங்குடியின கிராமத்தில் சி. பெருமாள் (58) என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை, பெருமாளின் வீட்டில் உணவு ஏதேனும் கிடைக்குமா..? என சோதனையிட்டது. அப்போது, சுற்றுச்சுவர் மற்றும் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதையறிந்து, சுதாரித்துக் கொண்ட பெருமாள் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமின்றியும் வீட்டை விட்டு வெளியேறினர்.
பின்னர், அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் என ஊர் பொதுமக்கள் காட்டு யானையை அங்கிருந்து விரட்டினர். வனங்களில் ஏற்படும் காட்டுத் தீயினால், வனவிலங்குகள் காடுகளை விட்டு வெளியேறி, மனித குடியிருப்புகளுக்கு அருகாமையில் சுற்றித் திரிகின்றன. எனவே, வனப்பகுதிகளை ஒட்டியுள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.