சூலூர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடக்கம் : தேர்தல் அலுவலர்கள் நியமனம்

கோவை : அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மறைவால் காலியாக இருக்கும் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது.

கோவை : அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மறைவால் காலியாக இருக்கும் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது. 

தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 22 தொகுதிகளில், முதற்கட்டமாக 18 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலுடன், இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. எஞ்சிய காலியாக உள்ள சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு வருகிற மே 19-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

அதன்படி, வரும் ஏப்ரல் 22 வேட்பு மனு தாக்கல் தொடக்கம் (காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை)

• ஏப்ரல் 29 வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள்

• ஏப்ரல் 30 வேட்பு மனுக்கள் பரிசீலனை மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

• மே 2 வேட்பு மனுக்களை திரும்பப் பெற கால அவகாசம்

• மே 19ல் வாக்குப் பதிவு

• மே 23ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

இந்த நிலையில், சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்களின் விபரங்கள் மற்றும் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலராக, கோவை உதவி ஆணையர் (நகர்ப்புற நிலவரி) ச. பாலகிருஷ்ணன் (7601954524) நியமிக்கப்பட்டுள்ளார். உதவி தேர்தல் நடத்து அலுவலர்களாக சூலூர் வட்டாட்சியர் ஆ. ஜெயராஜ் (9942819802) மற்றும் சூலூர் தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெ. மீனாகுமாரி (9600439524) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...