யானைகள் நடமாட்டம் அதிகரிப்பால் வனக்கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி மறுப்பு : தடையை மீறி சென்று நள்ளிரவில் வழிபாடு நடத்திய கிராம மக்கள்

கோவை : மேட்டுப்பாளையம் அருகே வனத்துறையினரின் தடையை மீறி ஓடந்துரை வனப்பகுதியில் உள்ள் பெரியசாமி அய்யனார் கோவிலில் வழிபாடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : மேட்டுப்பாளையம் அருகே வனத்துறையினரின் தடையை மீறி ஓடந்துரை வனப்பகுதியில் உள்ள் பெரியசாமி அய்யனார் கோவிலில் வழிபாடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட ஓடந்துரை வனப்பகுதியில் பெரியசாமி அய்யனார் கோவில் உள்ளது. 

அடந்த வனத்திற்குள் உள்ள இக்கோவிலில் ஊமப்பாளையம், மோத்தேபாளையம், கண்டியூர், தாயனூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 34 ஆண்டுகளாக சித்திரை மாதத்தில் பொங்கல் இட்டு படையல் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், இந்தாண்டும் பெரியசாமி அய்யநானரை வழிபட சிறுமுகை வனச்சரக அலுவகத்தில் கிராம மக்கள் அனுமதி கேட்டு மனு அளித்திருந்தனர். ஆனால், தற்போது வனத்தினுள் நீர் பற்றாக்குறையால் இக்கோவிலின் அருகே யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவித்து வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். 

இந்த சூழலில் நள்ளிரவில் 500-க்கும் மேற்பட்டோர் சித்திரை மாத சிறப்பு பூஜைக்காக வனத்துறையின் தடையை மீறி வனப்பகுதிக்குள் செல்ல சென்றனர். இவர்களை வனத்துறையினர் வனச்சோதனை சாவடி அருகே தடுத்து நிறுத்தி திரும்பி செல்ல வலியுறுத்தினர். 

இதனால், வனத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, வனத்துறையினரின் தடையை மீறி காட்டுக்குள் நுழைந்தனர். பின்னர், கோவிலுக்கு சென்று தங்களது வழக்கமான வழிபாட்டினை நடத்தினர். 

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ”யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதியே அனுமதி மறுக்கபட்டது. வனச்சட்டத்தை மீறி காட்டுக்குள் நுழைந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றனர். 

அதே நேரத்தில், ஆண்டு ஆண்டுகாலமாக எங்களின் குலதெய்வ கோவிலில் கிராம மக்கள் செய்து வரும் சித்திரை மாத திருவிழாவினை வனத்துறையினர் தடுத்து நிறுத்தாமல், விழாவிற்கு செல்வோருக்கு உரிய பாதுகாப்பு தர வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...